Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்ட காலத்திலும் இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கை தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சுப்ரமணிய சுவாமி என்பதை இலங்கை தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்திய அரசியலிலே கோமாளி பட்டம் பெற்றுள்ள சுப்ரமணிய சுவாமி இலங்கை வந்திருப்பது வெறும் அரசியல் விளம்பரத்திற்காகவே. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் தமிழ் நாட்டு மக்கள் இலங்கை தமிழர் பிரச்சினையில் கொண்டிருந்த அக்கறைக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் சுப்ரமணிய சுவாமி என்ற இந்த தனி நபரே.
எதிர்காலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியமைத்தாலும் கூட இவர் போன்றவர்கள் அரசியல் அதிகாரம் மிக்கவர்களாக மாறுவதற்கான சந்தர்ப்பம் கிடையாது. அதே நேரம் எமது இன்றைய அரசியல் பிரச்சினையை இவரிடம் விவாதிப்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவின் வருகை மூலமாக எமக்கு எதுவும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாம் உள்ளோம். எமது பிரச்சினையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றும் முடிவுபெற முடியாத நிலையில் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளோம்.
இத்தருணத்தில் இவர் போன்ற பகலில் ஒன்றும் இரவில் ஒன்றுமாக உளரிக்கொட்டும் அரசியல்வாதிகளை மதித்து பேசுவது கூட எம்மை நாம் தாழ்த்திக்கொள்வதற்கு நிகராகும். இதனாலேயே இவரை சந்திப்பதை நாம் தவிர்த்துள்ளோம்.
இவர் போன்ற எமது சமூகத்திற்கு எதிராக செயல்பட்டவர்களை நாட்டிற்கு உள்ளே வருவதற்குக் கூட நாம் அனுமதிக்க கூடாது. இவரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இலங்கை தமிழ் அரசியல் வாதிகளுக்கு தேவையில்லை என்பதே எனது கருத்தாகும்' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago