Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார்.
சமய கலாசார கல்விக்கான மன்றம் மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சிங்கள மொழி பேசும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் நடத்திய கட்டுரை போட்டியொன்றை நடத்தியது. இப்போட்டியில் வண. கசிம தேரர் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
இதன் பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சமய, கலாசார கல்விக்கான மன்றத்தின் தலைவர் எம்.எம்.ஏ. தஹ்லான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன், அஷ்ஷெய்க் உவைஸ் உட்பட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.
இக்கட்டுரைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட வண. கசிம தேரர் உள்ளிட்ட நாடாளாவிய ரீதியிலான வெற்றியாளர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய வண. சுசிம தேரர்,
"ஒவ்வொரு மாணவனும் ஏனைய மதங்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பாடசாலை புத்தகங்களில் ஏனைய மதங்கள் தொடர்பான விபரங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
அப்போது தான் நாட்டில் நிரந்தர சமாதானம் உருவாக முடியும். இது காலம் கடத்தாது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என்றார்.
Kethis Thursday, 23 February 2012 12:37 AM
இது மகிழ்ச்சியான விடயம். அதேபோல் புத்தர் பெருமானை பற்றிய கட்டுரைப்போட்டியில் மௌலவி ஒருவர் முதலிடம் பெற்று அதை அனைவரும் பாராட்டினால் சமய சகிப்புத்தன்மை சிறந்து விளங்குகிறது என்று அர்த்தமாகும்.
Reply : 0 0
Abdul Hakeem Saturday, 10 March 2012 01:10 PM
அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் அளிப்பானாக ஆமீன்.
Reply : 0 0
Imthoiyaz Ahmed Wednesday, 29 February 2012 12:08 PM
உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்
Reply : 0 0
smart gal Friday, 24 February 2012 07:54 PM
வாழ்த்துக்கள்..
அவருடைய எந்த கருத்து அவருக்கு முதலிடம் அளிக்க ஏதுவாக அமைந்தது என்று அறிய ஆவலாக உள்ளது.
Reply : 0 0
ummpa Friday, 24 February 2012 06:32 AM
அவருடைய கட்டுரை இப்பத்திரிகை பிரசுரிக்குமா?
Reply : 0 0
ibnuaboo Friday, 24 February 2012 02:44 AM
நபிகள் நாயகத்தை நன்கு படித்து கட்டுரை எழுதி பரிசு பெற்றுள்ளார். இக்கட்டுரை எழுத அவர் PALA நூற்களை ஆராய்ந்திருப்பார். பரிசுக்கென்றில்லாமல் இவர் விருப்பத்துடன் இதை எழுதி இருந்தால் ஏன் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. நபிகள் நாயகம் உண்மை என்றால் இஸ்லாமும் உண்மைதானே. அப்போ நபிகள் நாயகத்தை மனதார நம்பவில்லையா?
Reply : 0 0
SWAMY Thursday, 23 February 2012 11:09 PM
மிக நன்று இதே போல் மற்றவர்களும் புத்தனின் பரிநிர்வானம், அஹிம்சை ETC. படிக்க வேண்டும் இதில் உள்ள நண்பர்களின் கருத்தெல்லாம் "என் மதத்தை தேரர் ஏற்றுள்ளார்" என்பதே .
Alhamdulillah
Reply : 0 0
mohamed ibraheem Thursday, 23 February 2012 10:08 PM
Al hamdulillah, Great work, pls continue these type of work same like this topics.
Reply : 0 0
MUSTHAK Thursday, 23 February 2012 09:42 PM
Thanks to All Mighty Allah, and who has arranged this.
All Mighty Allah bless the hidayath to Susima Thero.
Reply : 0 0
irshad ahmed Thursday, 23 February 2012 06:20 PM
அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் அளிப்பானா.க ஆமீன்.
Reply : 0 0
mona Thursday, 23 February 2012 03:18 PM
அல்லாஹு அக்பர்
Reply : 0 0
P. ABDUL GAFFOOR Thursday, 23 February 2012 10:04 AM
இவ்வாறான அறிவியல் நிகழ்சிகளை மாணவர்கள் மத்தியில் நடத்தினால் மிகவும் வரவேற்கக் கூடியதாக இருக்கும். என் போன்றவர்கள் இதற்குச் சிறிதளவாவது நல்லது செய்வார்கள் என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.
நன்றி.............. வஸ்ஸலாம்.........
Reply : 0 0
suthais Thursday, 23 February 2012 03:49 AM
பிற சமயத்தவர்கள் அறிந்துவைத்துள்ள அளவுக்கு எம்மவர்கள் அறியவில்லையே என்பது கவலைதான்.
Reply : 0 0
Deen Thursday, 23 February 2012 03:24 AM
உண்மையாக இலங்கையில் உலகத்துடன் ஒப்பிடும் போது இஸ்லாம் மிகவும் அழகான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
Reply : 0 0
xlntgson Thursday, 23 February 2012 02:28 AM
I refrain from commenting on this. because all deeds are borne out of pure intentions.
Reply : 0 0
ABDUL AZEEZ Thursday, 23 February 2012 01:10 AM
உள்ளம் குளிரும் ஒரு செய்தி. வளர்க உங்கள் பணி.
Reply : 0 0
Thameez Wednesday, 22 February 2012 12:34 PM
வாழ்த்துக்கள்... அவருக்கு நேர்வழி கிடைக்க அல்லாஹ்வை பிரார்த்திப்போம்...
Reply : 0 0
m.anees Thursday, 23 February 2012 12:06 AM
ஹிதாயத் கிடைக்க பிரார்தியுங்கள்
Reply : 0 0
Brightfull Thursday, 23 February 2012 12:03 AM
தேரர் கசிம அவர்கள் நன்றாக தேடிப்படித்திருக்கிறார். என் இனிய வாழ்த்துக்கள்
சர்வமத சகிப்புத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு இதுவல்லவா.
காசினி போற்றும் உத்தம முகம்மது பற்றி கசிம தேரர் சரியான சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறார் வாழ்த்துக்கள் ஆயிரம் .....
Reply : 0 0
Bathurdeen vt Wednesday, 22 February 2012 11:32 PM
இது இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி அல்ல, அவருக்கு கிடைத்த வெற்றி.
Reply : 0 0
faroos Wednesday, 22 February 2012 08:46 PM
அல்ஹம்துலில்லாஹ் இது இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி இறைவன் அருள் புரிவானாக! இறைவா! அவர் மீதும் அவர் சார்ந்தோர் மீதும் நேர் வழி காட்டுவாயாக!
அமீன் அமீன் யாரப்பல் ஆலமீன்.
Reply : 0 0
jaleel jp Wednesday, 22 February 2012 06:49 PM
இறைவன் துணை, இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் எண்டு தெரிந்து கொண்டால் போதும்.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
Reply : 0 0
Meena Wednesday, 22 February 2012 06:01 PM
அல்ஹம்துலில்லாஹ்.
Reply : 0 0
ram Wednesday, 22 February 2012 05:31 PM
பாராட்ட வேண்டிய சிறந்த செயல். உண்மையான மதகுரு. மத நல்லிணக்க செயலின் செயல் வடிவம். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Kajanthan Wednesday, 22 February 2012 05:20 PM
இது தான் வேண்டும் தற்போது இந்த நாட்டிற்கு. வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Abdul Hafeez Wednesday, 22 February 2012 04:57 PM
ஒப்பீட்டு சமய ஆய்வு தனித் துறையாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
Reply : 0 0
ram Wednesday, 22 February 2012 04:55 PM
congratulations
Reply : 0 0
pasha Wednesday, 22 February 2012 02:33 PM
சில விருதுகளின் நடுவர்கள் உண்மையான வெற்றியாளர்களை தெரிவதை விட செய்திகளில் வர வேண்டும் என்ற நோக்கதிற்காக தெரிவுகள் செய்வது வழக்கம்.
Reply : 0 0
ummpa Wednesday, 22 February 2012 02:10 PM
அன்பான நண்பர்களுக்கு, நாங்கள் முஸ்லிம்களாக பிறந்து இருக்கிறோம் ஆனால் இஸ்லாமிய மகத்துவம் அதன் பெறுமதி தெரியாதவர்களாக பல முஸ்லிம் சகோதர சகோதரிகள் வாழ்ந்துகொண்டு இருப்பதனால் மாற்றுமதத்தவர்கள் இதில் நாட்டம் கொள்ளாமல் இருப்பதக்கு காரணம் இருந்தும் இப்படியான முயட்சிகளை சமய, கலாசார கல்விக்கான மன்றத்தினர் செய்வதன் காரணமாக மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை படிப்பதன் வெளிப்பாடுதான் இன்று பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார். ஆகவே "இஸ்லாத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்" முஸ்லிம்களை பார்த்து வேண்டாம்.
Reply : 0 0
meenavan Wednesday, 22 February 2012 01:27 PM
வாழ்த்துகள் வண. சுசிம தேரர் அவர்களே.
Reply : 0 0
சிறாஜ் Wednesday, 22 February 2012 01:16 PM
மாஷா அல்லாஹ்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago