Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 மார்ச் 02 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனீவா கூட்டம் நடைபெறும் நிலையில் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வற்புறுத்தல்களை நிறுத்த வேண்டும் என டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"சுவிட்ஸர்லாந்தின், ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 19ஆவது அமர்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த கூட்ட தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எமது நாட்டிற்குள் நீதி, சட்டம் என்பவற்றை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறியமை, மனித உரிமை மீறல்கள், வெள்ளைவான் கலாசாரம், ஜனநாயக ஒடுக்கு முறைகள், சர்வாதிகாரப் போக்கு ஆளுகை முறை, இனப்பிரச்சினைக்காகத் தீர்வு இழுத்தடிப்பு என்பவற்றாலேயே மிகவும் துரதிஷ்டவசமான இந்த நிலைமை உருவாகியுள்ளது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 50ற்கும் அதிகமானவர்கள் கொண்ட குழு ஒன்று ஜெனீவா சென்று மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிகளை வகுத்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக வடக்கு தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்திய பத்மினி சிதம்பரநாதன்; விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நாட்டில் தீவிரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது.
அது உண்மை என்றால் ஜெனீவா கூட்டம் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில், வடக்கு தமிழ் அரசியல்வாதியான பத்மினி சிதம்பரநாதன் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைத்து விசாரணை நடத்துவது வடக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மறைமுகமான அச்சுறுத்தல்கள், ஒடுக்குமுறை என குறிப்பிடலாம்.
இந்த நடவடிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் பாதுகாப்பாளர் என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இன்று வடக்கில் தமிழ் மக்கள் இராணுவத்தின் ஆட்சிக்குள் உள்ளனர். இராணுவத்தின் கண்காணிப்பு வடக்கிலுள்ள ஒவ்வொரு தமிழரின் பின்னாலும் உள்ளது.
வடக்கு மக்கள் பயம், சந்தேகம் இன்றி சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது. ஆழமாக சிந்திக்கும்போது வடக்கு தமிழர்களுக்கு வாழும் உரிமை, சுதந்திரம், அபிவிருத்தி என்பன ஒரு கனவுக் கதையாகவே எந்நாளும் உள்ளது.
உண்மையாக வடக்கு மக்கள் மிகுந்த பயம், பீதியுடனேயே வாழ்கையை நடத்துகின்றனர். அவர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமையில் வடக்குத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனை அழைத்து சென்று விசாரணை செய்வது இதற்கு உதாரணமாகின்றன.
இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கையை அரசாங்கம் உடன் நிறுத்தி உண்மையான சமாதானம், சுதந்திரம் வடக்கு, கிழக்கில் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்".
jeyarajah Saturday, 03 March 2012 02:48 PM
Hi,Dr,Thank you,Please make people understand the difference between a Gun and the ballot. The Sri Lankan govts (either S.L.F.P or U.N.P) well respected the gun but not the elected rep. of the people. ,no riots or any disturbance during those regime. The representative of the govt.attended all conferences in schedule with L.T.T.E but now T.U.L.F was waiting outside the door and the Govt. is coming out with blame excuses even in Geneva. People have forgotten the past and the taste of democracy.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
2 hours ago