2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 30 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை நீர்விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை  8 மணிவரை இந்த நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

புதிய நீர்விநியோகக் குழாய்களை பொருத்தவேண்டியுள்ளதாலும் திருத்த வேலைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதாலுமே இந்த நீர்விநியோகம் தடைப்படவுள்ளதாக அந்தச் சபை கூறியுள்ளது.

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, யூனியன் பிளேஸ், கொம்பனித்தெரு, சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, குமரன் ரட்னம் வீதி, மலே வீதி,  ஜஸ்ரிஸ் அக்பர் மாவத்தை,  மாக்கன் மாக்கர் மாவத்தை, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மற்றும் இவற்றுடன் இணைக்கப்பட்ட சிறு வீதிகள் உள்ள பகுதிகளிலேயே நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன், டுப்பிளிக்கேஷன் வீதி, காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து பம்பலப்பிட்டி சந்திவரையான கிளென் ஆபர் பிளேஸ்  மற்றும் இவற்றுடன் இணைக்கப்பட்ட சிறு வீதிகளிலும்  நீர்விநியோகம் தடைப்படவுள்ளது. 

இந்த நிலையில், நீர் பாவனையாளர்கள் தங்களுக்கு தேவையான நீரை முன்கூட்டியே சேமித்துவைக்குமாறும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .