2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்போம்:ஜே.வி.பி

Super User   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம் என மக்கள் விடுதலை முன்னனி உறுதியளித்துள்ளது.

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இரவு பத்தரமுல்லையில் இடம்பெற்றது.

இதன்போதே, மக்கள் விடுதலை முன்னனி தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

"முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தர்வகள் உட்பட ஏனையவர்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என உறுதியளித்தனர்.

முஸ்லிம்கள் தொடர்பில் அண்மைக்காலமாக சிங்கள மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாரிய பிரச்சினையாகும்.

இதனால் முஸ்லிம்களுக்கு தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் விடுதலை முன்னணி உதவும் என உறுத்தயளித்ததனர்" என்றார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னநாயக்க, முன்னாள் ஈரான் தூதுவர் எம்.எம்.எம்.சுஹைர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் முபாரக் மௌலவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • Kanavaan Friday, 07 December 2012 07:11 PM

    ஜேவிபியினர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கட்டும், முஸ்லிம் கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்திற்குச் சென்று கதிரைகளுக்குச் சூடேற்றி வரட்டும். முஸ்லிம்கள் என்றும்போல் மற‌வாமல் முஸ்லிம் காங்கிரஸிற்கும், மற்றைய முஸ்லிம் கட்சிகளுக்கும் வாக்குகளை அள்ளி வழங்கட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .