2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நான் பழிவாங்கும் மனிதன் அல்ல: ஜனாதிபதி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் பழிவாங்கும் மனிதன் அல்ல. உயர்மட்டத்தில் இருந்தால் என்ன, கீழ் மட்டத்தில் இருந்தால் என்ன, சகலருக்கும் சட்டம் சமனானது. யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன வெளியேறும் நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கெநோவின் ஓய்வகத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நேற்று வியாழக்கிழமை திறந்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ஒருவரின் ஊழல் மோசடி குறித்து எதிர்க்கட்சி அன்று கோஷம் எழுப்பியது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஓடியது. அவரின் தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றது.

இன்று சட்டத்திற்கு அமைய, அரசியலமைப்பிற்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அரசாங்கத்திற்கு எதிரான குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தலைசாய்க்காது. சட்டத்திற்கு அமைவாக சகல விடயங்களும் முன்னெடுக்கப்படும் என்றார்.

You May Also Like

  Comments - 0

  • kanavaan Saturday, 08 December 2012 05:54 PM

    சார், நீங்க ஜனாதிபதியாச்சே, உங்களால எப்படி பழிவாங்க முடியும்? உங்கிட்டத்தானே நிறைய ஆட்கள் இருக்காங்க. அப்படியெல்லாம் உங்களச் சொல்லமாட்டங்க சார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .