2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வாகன விபத்தில் மூவர் பலி

Suganthini Ratnam   / 2013 மார்ச் 07 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, உனவட்டுன பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

தனியார் பஸ் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே இந்த விபத்தின்போது மரணமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் ஹபரதுவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .