2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சந்தேகநபரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

தாக்குதல் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நபர் ஒருவரின் கையை வாளினால் வெட்டியும் அடித்தும் படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸாரினால் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு, தளுபத்தை பிரதேசத்தில் இன்ற ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தளுப்ததை சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவரின் உறவினர்களும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.

சம்பவம் இடம்பெற்று மூன்று தினங்களாகியும் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்ப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்

தளுபத்தை பிரதேசத்தை சேர்ந்த ஜுட் நாமல் நிரோசன் என்ற 40 வயதுடைய நபரே கடந்த வெள்ளிக்கிழமை வாகனம் ஒன்றில் வந்தவர்களால் தாக்கப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்ச பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

இவரது இடது கையின் சுண்டு விரல் துண்டாக்கப்பட்டுள்ளதுடன், முழங்கைக்கு கீழ் பெரும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .