2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அடகு வைத்த நகையிலும் போலி; பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.சாஜஹான்

நீர்கொழும்பில் உள்ள வங்கிக் கிளை ஒன்றில் அடகு வைத்த நகையை மீட்டபோது, அதில் ஒரு நகை போலியாக இருப்பதைக் கண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அடகு வைத்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

அடகு வைத்த 2 பவுண் தங்கச்சங்கிலி, கைச்சங்கிலி ஆகியவற்றை இந்தப் பெண்  அடகு எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில், அடகு எடுத்த இந்த நகைகளில்  கைச்சங்கிலி போலியாக இருப்பதை அவரது கணவர் அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த வங்கியில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்த இந்தப் பெண்,  நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .