2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கார் தீக்கிரை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்       


நீர்கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில்  நவீன ரக கார் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

 நீர்கொழும்பு, ஏத்துக்கால  ஜுட்மாவத்தை பிரதேசத்தில் உள்ள ஒழங்கையொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இந்தக் கார் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதியதுடன்,  வீதியில் நின்ற ஒருவரின் மீதும் மோதியுள்ளது.

இந்த நிலையிலும் காரின் உரிமையாளர் காரை நிறுத்தாது சென்றுகொண்டிருக்கையில் கார்ச் சில்லுகளில் ஒன்று வீதியோரத்தில் உள்ள வடிகானில் இறங்கியுள்ளது. அவர் அந்த இடத்திலேயே காரை நிறுத்திவிட்டு தனது மனைவி பிள்ளைகளுடன் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் காரை துரத்திக்கொண்டு முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் தடிகளினாலும் பொல்லுகளினாலும் காரை அடித்து நொருக்கிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன்  பின்னர் கார் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

35 இலட்சம் ரூபா பெறுமதியான காரே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தீக்கிரையான கார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .