2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள்- கனரக வாகனம் மோதி விபத்து: தாய் பலி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீர்கொழும்பு - சிலாபம்  பிரதான வீதியில் தளுபத்தை எனுமிடத்தில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.  இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு, துளுபத்தை கல்கட்டுவ பிரதேசத்தைச் செர்ந்த 45 வயதான இந்திராணி பெர்னாந்து என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே சம்பவத்தில் பலியானவராவார்.

கொச்சிக்கடை பிரதேசத்திலிருந்து கொழும்பு நாக்கி சென்று கொண்டிருந்த கனரக லொறி அதே திசையில் மோட்;டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதியதனாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பெண்ணின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .