2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விலங்குகளின் கழிவுகளால் பிரச்சினை

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்
 
நீர்கொழும்பு - கொச்சிக்கடை, ஒட்டியாவத்தை பிரதேசத்தில் நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவால் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் மாநகர சபையின் அதிகாரத்திற்கு உட்படாத வேறு பிரதேசங்களிலிலிருந்து வாகனங்களில் கொண்டுவரப்படும் விலங்குகளின் கழிவுகளும் குப்பைகளும் கொட்டப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
 
பிற பிரதேசங்களிலிலிருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக பிரதேசவாசிகள் கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து வேறு இடங்களிலிலிருந்து குப்பைகள் கொண்டு வீசப்படுவது நிறுத்தப்பட்டது.
 
இந்நிலையில், கடந்த வாரம் பிற பிரதேசங்களிலிவிருந்து கொண்டு வரப்பட்ட கோழிகளின் வெட்டப்பட்ட உடற் கழிவுகள் மற்றும் விலங்கினக் கழிவுகளை கொண்ட இரு கழிவகற்றும் வாகனங்கள் பிரதேசவாசிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொச்சிக்கடை பொலிஸார் வாகனத்தை ஓட்டி வந்த இருவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
நீர்கொழும்பு மாநகர சபையை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கழிவுகள் மீண்டும் கொட்டப்படுவதற்கு மறைமுகமாக உதவி புரிவதாகவும், பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களில் ஒன்று மாநகர சபைக்கு சொந்தமானதெனவும் பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
 
சட்டவிரோதமான முறையில் வேறு இடங்களிலிலிருந்து கொண்டுவரப்படும் மிருகங்களின் கழிவுகள் ஒட்டியாவத்தை பிரதேசத்தில் கொட்டப்படுவதன் காரணமாக அயற்பகுதிகளில் வசிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .