2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மறுமணம் செய்துகொண்ட பாடகருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்     

முதல் மனைவி இருக்கும்போதே மறுமணம் செய்துகொண்ட பாடகர் ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.பி. அமரசிங்க உத்தரவிட்டுள்ளார். 

வல்பொல, இப்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பாடகரான சஞ்சீவ தர்மசிறி என்பவருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட அவர் விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவர் கனேமுல்ல, ஹிப்பட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த  2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி கம்பஹா மாவட்ட விவாக காரியாலயத்தில் வைத்து பதிவுத்திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடித்து 6 வருடங்களுக்கு பிறக்கு மீண்டும் இவ்வாண்டு (2013) வேறொரு பெண்ணை நுகேகொடை விவாக காரியாலயத்தில் வைத்து பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் அறிந்திருந்த மேற்படி பாடகரின் முதல் மனைவி குறித்த நபரின் மடிக் கணினியில்  இருந்த பெண்னொருவரின் புகைப்படத்தை கண்டு சந்தேகமடைந்து அது தொடர்பில் கணவரிடம் விசாரித்துள்ளார்.

இதன்போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது கணவர் மறுமணம் செய்துகொண்டதை அறிந்துகொண்ட அப்பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ் வழக்கு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • Ash Thursday, 07 November 2013 04:03 AM

    சட்டரீதியற்ற முறையில் எத்தனை வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .