2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்       

விபத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புகொண்ட வைத்தியரை விளக்கமறியல் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட்ஏ.என்.எம்.பி. அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

நீர்கொழும்பு, தளுபத்தை, விக்டோரியா மாவத்தையைச் சேர்ந்த அரமபுரகே மெலான ஜயேந்திர பெர்னாந்து என்ற வைத்தியNருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வைத்தியர், பாதுகாப்பற்ற முறையில் காரை செலுத்தி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மீது மோதியுள்ளார்.

இச்சம்பவம் கடந்த 15 ஆம் திகதி பிற்பகல்; நீர்கொழும்பு , பல்லன் சேனை வீதி சந்தி அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த வயோதிபர் பின்னர் மேற்படி வைத்தியரினாலேயே  வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் உறவனிர்களால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   

குறித்த வைத்தியரை கைதுசெய்த பொலிஸார் நீர்கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் செய்தனர்.

வைத்தியருக்கு எதிராக  பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தியமை, விபத்து ஏற்படுவதை தவிர்க்காமை, மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு படுகாயம் ஏற்படுத்தியமை, விபத்தை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்காமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. வைத்தியர் அதனை மன்றில் ஏற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து வைத்தியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .