2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

2014ஆம் ஆண்டு இளைஞர்களின் அபிவிருத்தியில் முக்கியமானது: லலித் பியும்

Super User   / 2014 ஜனவரி 06 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

'உலக இளைஞர் மாநாடு' எதிர்வரும் மே மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளதால் 2014ஆம் ஆண்டு இலங்கை இளைஞர்களின் அபிவிருத்தியில் முக்கியமானதாக இருக்கும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.

இளைஞர்கள் தொடர்பில் இலங்கையினால் மேற்கொள்ளப்படும் வரவேற்கத்தக்க முயற்சிகள் காரணமாக இலங்கை ஒரு சிறந்த நாடு என்ற சமிக்கையினை வெளிப்டுத்துகின்றது என அவர் தெரிவித்தார்.
 
'உலக இளைஞர் மாநாடு' தொடர்பில் லலித் பியும் பெரேரா வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் அபிவிருத்தி என்பது சமூகநலன் என்ற மனோபாவத்துடன்  பேசப்பட்டது. தேசத்தை கட்டியெழுப்பும் பணிக்கு இணையாக அரசாங்கத்தினால் இந்த மனோபாவத்தை மாற்ற முடியும். 'அபிவிருத்தியின் முக்கியத்துவம் மிக்க பிரிவினராக இளைஞர்கள் உள்ளனர்' என்ற மனோநிலை நாடு முழுவதும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் சர்வதேச ரீதியான நற்பெயரை பெற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் 2012இல் வெளியிடப்பட்ட 'உலக இளைஞர் அபிவிருத்தி' தொடர்பில் சமர்ப்பித்த பத்திரத்தில் இலங்கை பற்றி 14 தடவைகள் குறிப்பிட்டிருந்தமையானது இலங்கை எவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

உட்கட்டமைப்பு மற்றும் இளைஞர் திறன் ஆகியவற்றை பற்றாக்குறை எதுவுமின்றி நாடு கொண்டிருப்பதன் காரணமாக உலக அளவிலான எந்த ஒரு நிகழ்வையும் நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.சர்வதேச அரங்கில் இளைஞர் தொடர்பில் பேசப்படும்போது இலங்கை பற்றியும் பேசப்படும் நிலை விரைவில் உருவாகும்.

நவம்பர் மாதம் பொதுநலவாய இளைஞர் மாநாட்டை நடத்திய அனுபவத்துடனும் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்யும் ஆற்றலுடனும் உலக இளைஞர் மாநாட்டினை மே மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்துவதற்கு ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த மாநாடு "2016 இற்கு பின்னர் மிலேனியம் அபிவிருத்தி" என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் 1,500 வெளிநாட்டு இளைஞர்கள் பிரதிநிதிகளும் 100 உள்ளூர் இளைஞர்கள் பிரதிநிதிகளும்  பங்கேற்கபர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்பாட்டுக் குழுவிற்கு இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இணைத் தலைமை வகிக்கின்றனர். அத்துடன் பல்வேறு பணிகளை கவனிக்கவென 22 துணை குழுக்கள் காணப்படுகின்றன.

அதேவேளை தொனிப்பொருள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதற்காக 10 உள்ளுர் உறுப்பினர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்களை கொண்ட இளைஞர் படையணி ஒன்றும் உள்ளது. மாநாட்டிற்கு இணைவானதாக  பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

மாநாட்டுடனும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளுடனும் சுமார் 10,000 இலங்கை இளைஞர்களை தொடர்புபடுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். இலச்சினையொன்றை வடிவமைப்பதற்கான போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. இது ஜனவரி மாதம் 31ஆம் திகதி முடிவடையும்.

ஆர்வமுள்ளோர் தமது ஆக்கங்களை இணையத்தளம் மூலமாக சமர்ப்பிக்க முடியும். மாநாட்டிற்கு இணைவானதாக இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கண்காட்சி மற்றும் கலாசார நிகழ்வு மற்றும் பொது நிகழ்வு ஆகியன இடம்பெறும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X