2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Super User   / 2014 ஜனவரி 22 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கந்தானை பொலிஸ் நிலைய சார்ஜன் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்ப்பட்டு நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிரந்த அமரசேகர  மற்றும் அவரது வாகன சாரதியான ருவன் பிரதீப ஆகியோரை எதிர்வரும்  29ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க இன்று உத்தரவிட்டார்.

கந்தானை பொலிஸ் நிலையத்தில்  சுற்றாடல் பிரிவில் பணியாற்றும் சார்ஜன்   பிரியந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் குருன்தெனிய ஆகியோரை தாக்கிய சம்பவம் தொடர்பாகவே இருவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கமாறு உத்தரவிடப்பட்டனர்.

வெலிகம்பிட்டடிய பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருருந்த தேர்தல் சுவரொட்டிகளை குறித்த பொலிஸார் இருவரும் நேற்று அகற்றிக் கொண்டிருந்தபோது வாகனமொன்றில் வந்த சந்தேக நபர்கள், தேர்தல் சுவரொட்டிகளை அகற்றியமை தொடர்பில்  விசாரித்து விட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்த பொலிஸ் சார்ஜன் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் சார்ஜன் படுகாயமடைந்துள்ளதால் அவரிடமிருந்து வாக்கு மூலம் பெற முடியாதுள்ளதாகவும் மேலும் ஒருவரை கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் கந்தானை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X