2025 ஜூன் 21, சனிக்கிழமை

கடலரிப்பினால் இரத்மலானையில் 100 வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 14 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலான கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள 100ற்கும் மேற்பட்ட வீடுகள் கடலரிப்பு காரணமாக முற்றாக சேதமடைந்துள்ளன.

இரவு வேளையில் ஏற்பட்ட இந்த கடலரிப்பின் தாக்கம் அதிகரித்தமையே இதற்கு காரணத் எனவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அருகிலுள்ள விகாரையொன்றில் தஞ்சடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உணவு வசதிகளோ மற்றும் தங்குமிட வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கபட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வொன்று பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .