Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 04 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
பம்பலப்பிட்டி கடைத்தொகுதி ஒன்றில் இலத்திரனியல் பொருட்கள் கடை ஒன்றை நடத்திய வர்த்தகரான ராமசாமி பிரபாகரனுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பொருட்களும் உடமைகளும் இன்னும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என அவரின் வழக்குரைஞர் உயர் நீதிமன்றில் வாதாடினார்.
இது தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த மனுவின்படி,
கடந்த 16.05.2009 ஆம் திகதி ராமசாமி பிரபாகரன் இந்தியா சென்றிருந்த சமயம் அவரது வீட்டை சோதனையிட்ட வெள்ளவத்தை பொலிஸார் சில கடவுச்சீட்டுகள், கடையுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் கடைசியின் சாவிகளையும் கைப்பற்றினர்.
பயணத்தை இடைநிறுத்திவிட்டு நாடு திரும்பிய பிரபாகரன், பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு இது தொடர்பாக பேசுவதற்குச் சென்றார். அந்நிலையத்தின் பொறுப்பதிகாரி இது குறித்து தனக்குத் தெரியாதெனவும் தெமட்டகொடையிலுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவு நிலையத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தினார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றபோது அங்கு அவர் தடுத்துவைக்கப்பட்டார்.
மே 21 ஆம் தகிதி கேணல் ரஞ்சித் பெரேராவுடனான தொடர்புகுறித்து பொலிபொலிஸார் விசாரித்தனர். கேணல் பெரேராவை பல வருடங்களாக தெரியும் என்பதற்கு மேல் எதுவும் இல்லை என பிரபாகரன் கூறினார்.
மே 23 ஆம் திகதி கொழும்பு குற்றப் பிரிவின் 3 ஆம் மாடிக்கு இவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்தனவும் இன்னுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தரும் இவரை இரும்புகோல்களினால் அடித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இவர் தலையை பெற்றோலும் மிளகாய் தூளும் கொண்ட செலோபின் பையால் மூடினர். மனுதாரரான பிரபாகரன் நினைவிழந்துபோனார்.
மே 24 ஆம் திகதி இவரை பம்பலப்பிட்டியிலிருந்த இவரது கடைக்கு கொண்டுசென்றனர். கடையில் பொருட்கள் சின்னாபின்னமாக்கப்பட்டு கிடந்தன. 35 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டிருந்த என பிரபாகரன் கூறியுள்ளார்.
நீதிமன்றின் ஆணையின்றி பொலிஸார் தனது கடையை மூடி சீல் வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
பொலிஸார், தாம் எடுத்துச் சென்ற கணினி, ஆவணங்கள் என்பற்றுக்கு பற்றுச்சீட்டு வழங்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
மே 26 ஆம் திகதி ஏ.எஸ்.பியும் 10 பொலிஸாரும் வந்து கேணல் ரஞ்சித் பெரேராவுடனான தொடர்புபற்றி விசாரித்ததாக அவர் கூறினார்.
முதுகில் இரும்புகோலை வைத்து அதில் தனது கைகளை பிணைத்தபின் பெற்றோல், மிளகாய்தூள் சித்திரவதைக்கு உட்படுத்திக்கொண்டே எஸ்லோன் குழாய்களால் பொலிஸார் தன்னை தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
மூன்று நாட்களின்பின் தன்னை மீண்டும் 3 ஆம் மாடிக்கு கொண்டு சென்று, பொலிஸார் சித்திரவதை செய்ததாகவும் ஆணி அறையப்பட்ட பலகையால் தான் தாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஜூன் 8 ஆம் திகதி குளியலறையில் தன்னை தலைகீழாக கட்டித்தொங்கவிட்டு, அந்தரங்க உறுப்பின் முன்பகுதியில் மிளகாய்தூள் தடவியதாகவும் தண்ணீர் கேட்டபோது வாயினுள் சுடுநீர் ஊற்றப்பட்டதாகவும் அவர்கூறினார்.
குறித்த ஒருநாளில் பொலிஸார் தனது கலால் விரல்களின் நகத்தை பிடுங்கியதாகவும் அவர் கூறினார்.
ஜூன் 18இல் முகத்தை மூடி, கைவிலங்கிட்டு, தெரியாத ஒரு இடத்திற்கு கொண்டு சென்று அங்கு நிர்வாணமாக்கி ஆணி அடிக்கப்பட்ட பலகை துண்டுகளால் அடித்ததாகவும் பின்னர் முழங்காலில் மின் பாய்ச்சியதாகவும் அவர் கூறினார்.
தனக்கு புரியாத மொழியான சிங்களத்தில் எழுத்தப்பட்ட ஆவணங்களில் வலுக்கட்டாயமாக கையொப்பமிடச் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஜூலை 2009 இல் தான் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஒரு சமயம் கொழும்பு பிரதான நீதவான் வருகை தந்தபோது தான் அவரிடம் முறையிட்டவேளை தனது காயங்களைக் கண்டு, நீதவான் அதிர்ச்சியடைந்து மருத்துவப் பரிசோதனைக்கு தன்னை அனுப்புமாறு பணித்ததாகவும் பிரபாகரன் கூறினார்.
ஆனால் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அந்த உத்தரவைப் பின்பற்றவில்லை எனவும் பிரபாகாரன் கூறினார்.
தன்னை தடுத்து வைத்திருப்பதற்கு சட்டபடியான ஆணை எதுவும் பொலிஸாரிடம் இல்லை என அவர் கூறினார்.
பிரபாகரன் தனது அடிப்படை மீறல் மனுவில் 90,000,000 ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார்.
அவரின் சார்பில் உயர் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட வழக்கறிஞர் ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரர் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள போதிலும்; அவரின் வாகனம், வீடு, ஆவணங்கள் என்பன இன்னும்; ஒப்படைக்கப்படவில்லை என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
சிரேஷ்ட அரச வழக்குரைஞர் சானக விஜேசிங்க, ஆலோசனை பெறுவதற்கு அவகாசம் வேண்டுமெனக் கோரினார்.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 16 ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்தது.
Vj Saturday, 05 November 2011 07:27 AM
Way to go Mr.Ramasamy, fight for justice.
Reply : 0 0
KamalSab Saturday, 05 November 2011 02:45 PM
மனசு தாங்க மாட்டேன் என்கிறது.
Reply : 0 0
Mohamed Janan Saturday, 05 November 2011 08:28 PM
Mr.Prabaharan உங்களை போன்று பலர் இந்த நாட்டிற்கு தேவை ....... நீதிக்காக போராடுங்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
38 minute ago