Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மிதிபலகையில் நின்று பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் கால் தடுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நுணாவில் மேற்கு சாவகச்சேரியை சேர்ந்த நமசிவாயம் ராசரட்னம் (வயது 58) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. நுணாவில் அறவொளி சனசமூகத்தடியில் குறித்த பஸ்ஸில் பயணித்த மற்றுமொரு பயணி இறங்கிய பின், குறித்த நபர் மீண்டும் பஸ்ஸில் ஏறுகையிலேயே இவ்வாறு தடுக்கி விழுந்து படுகாயமடைந்தார்.
அவர் தலையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுணாவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago