Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 18 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும், எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), கடந்த 6ஆம் திகதி பாடசாலைக்கு அண்மையில் வைத்து தாக்கப்பட்டார்.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றே, அவர் மீது தாக்குதலை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் 18ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, சந்தேகநபர்கள் இன்று (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தாக்குதலுக்குள்ளான ஆசிரியரைமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளையிட்ட நீதிவான் சி.சதீஸ்தரன், வழக்கை பிற்பகல் வரை ஒத்திவைத்தார்.
வழக்கு மீளவும் பிற்பகல் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மன்றில் முன்னிலையானார்.
இதன்போது. "எதிரிக் கூண்டில் நிற்கும் முதலாவது சந்தேகநபர் என்னைத் தாக்கினார். இரண்டாவது சந்தேகநபரும் அவ்விடத்தில் நின்றார்" என்று ஆசிரியர் மன்றில் தெரிவித்தார்.
இதையடுத்து. "தாக்குதலுக்குள்ளான ஆசிரியருக்கு சிறிய காயங்களே உள்ளன. சாதாரண நோவுக்கும் வைத்தியசாலையில் விஓபி போடுகின்றனர்" என்று எதிரிகள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் மன்றுரைத்தார்.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .