Editorial / 2018 ஜனவரி 03 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
புதுவருடதினத்தில், நவாலி - அட்டகரி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து, பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்த ஆவாக்குழுவைச் சேர்ந்த நால்வரை, இன்று (03) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் நால்வரும், உடுவில் மற்றும் நவாலி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
புதுவருட தினத்தன்று நவாலி பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர், அங்கிருந்த கடை ஒன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர். பின்னர், அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த ஆவாக் குழுவினர், பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்தனர்.
இது தொடர்பில், புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த மானிப்பாய் இரகசிய பொலிஸார், சந்தேக நபர்களில் நால்வரை நேற்று கைது செய்திருந்தனர்.
மேலதிக விசாரணையின் பின்னர், சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
23 minute ago