2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

செல்வநாயகம் கபிலன்   / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், கடந்த டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால் இன்று (23) உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கவில்லை என நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .