2025 மே 17, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் எண்மர் நிபந்தனையுடன் விடுதலை

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் கைதான 8 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதவான் ஏ.யூட்சன், கடுமையாக எச்சரித்து, 5 வருடங்கள் ஒத்தி வைத்த 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு, இன்று (03) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட போதே, நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த 8 இந்திய மீனவர்களும் ஓகஸ்ட் 19, 21ஆம் திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .