Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 15 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
‘ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோர், தனது வாள் வீச்சுக்கு தப்ப முடியாது என்று முழங்கும் ஜனாதிபதி, தமிழினப் படுகொலையாளிகள் மீதும் அதே வேகத்தை காட்ட வேண்டும்’ என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அனைவருக்கும் கட்சி பேதமின்றி உச்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில்,
‘நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றங்களை பெரிதும் பாதிக்கும் விடயமான ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. இலங்கையைப் பொறுத்தவரை அபிவிருத்தி, முன்னேற்றம் என்பவற்றுக்கு பெருந்தடையாக நாட்டில் நீடித்துவந்த யுத்தமே அமைந்தது.
தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தி சிங்கள பௌத்த மேலாதிக்கம் மிக்க நாடாக இலங்கையை உருவாக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தமே, நாட்டையும் நாட்டு மக்களையும் பேரழிவுகளுக்கு இட்டுச் சென்ற கொடிய யுத்தத்தின் தோற்றுவாயாகும்.
தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலை குற்றங்களுக்கு உரிய நீதியை வழங்காது, உண்மையான நல்லிணக்கத்தையோ, நிலையான சமாதானத்தையோ ஏற்படுத்திவிட முடியாது.
தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றத்துக்கு உரிய நீதியை பெற்றுக்கொடுப்பதுக்கான பொறுப்புக் கூறலை முற்றுமுழுதாக மறுத்துவரும் ஜனாதிபதி, ஊழல் விடயத்தை முன்னிலைப்படுத்துவதானது உண்மையில் விந்தையாக இருப்பதுடன் இனப்படுகொலைக் குற்றவாளிகளை பாதுகாப்பதுடன் அவற்றை மூடிமறைக்கும் தந்திரமாகவும் அமைந்துள்ளது.
கட்சி, பதவி, என்பவற்றை பொருட்படுத்தாது இனப்படுகொலையாளிகள் மீதும் உடனடியான நடவடிக்கையை எடுப்பதன் மூலமே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதுவே நீடித்து நிலைத்து நிற்கும் சமாதானத்துக்கான ஒரே தீர்வாகும்’ என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago
37 minute ago