2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இளைஞன் மீது கத்திக்குத்து: சந்தேகநபர் கைது

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் தெற்கு பகுதியில் வியாழக்கிழமை (18) இரவு இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திகுத்து சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை (19) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த எஸ்.திலீபன் (வயது 24) என்ற இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை (18) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று சுன்னாகம் தெற்கு பகுதியில் வைத்து மேற்படி இளைஞன் மீது கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அதே பகுதியினை சேர்ந்த இயைஞனை கைது செய்ததுடன், குத்துவதற்கு பயன்படுத்திய கத்தியினையும் மீட்டுள்ளனர்.

இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பகையே இக் கத்திக்குத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X