Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 21 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சொந்தப் பாவனைக்கு கஞ்சா வைத்திருந்ததாகக் கூறிய இளைஞர் ஒருவரை, யாழ்ப்பாண பொலிஸார் நேற்று முன்தினம் (20) இரவு கைதுசெய்துள்ளனர்.
கொக்குவில் ரயில் நிலையப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் ஒருவர், கஞ்சாவுடன் ரயில் நிலையப் பகுதியில் நிற்பதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரை சோதனையிட்டனர்.
இதையடுத்து, குறித்த இளைஞரின் உடமையில் இருந்து 04 கிராம் கஞ்சாவைப் பொலிஸார் மீட்டனர். இதன்போது இளைஞர், அதனை தான் பாவிப்பதற்காகவே வைத்திருந்தேன். அதனை விற்பனை செய்யும் நோக்கில்லை என, பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, குறித்த இளைஞரை கைதுசெய்த பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago