2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கல்வி அமைச்சின் முன் அதிபர்கள் போராட்டம்

George   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வடமாகாணத்தில் அதிபர் தரத்தில் சித்தி அடைந்து பாடசாலைகள் கிடைக்கப்பெற்று ஆனால் பாடசாலைகளை பொறுப்பேற்க அனுமதி கிடைக்காத 98 அதிபர்கள், வடமாகாண கல்வி அமைச்சின் முன், புதன்கிழமை (28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்களை சந்தித்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், கலந்துரையாடினார். இதனையடுத்து, வடமாகாண கல்வி அமைச்சருடன் கலந்துரையாடிய அமைச்சின் செயலாளர், எதிர்வரும் 2 ஆம் திகதி உரிய பாடசாலைகளை பொறுப்பேற்குமாறு வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவித்ததாக அதிபர்களிடம் கூறினார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X