2025 ஜூன் 21, சனிக்கிழமை

கைவிடப்பட்ட சிசு உயிரிழப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைவிடப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த சிசு கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு கண்டுபிடிக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வந்தது.

சிசுவின் பெற்றோர் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் குறித்த சிசு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த சிசுவின் சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர், உறவினர்கள் முன்வரும் பட்சத்தில் சடலத்தை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .