2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளையில் ஈடுபட்டவரை அடையாள அணிவகுப்புக்குட்படுத்த உத்தரவு

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், நீராவியடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கடந்த 2014ஆம் ஆண்டு புகுந்து வீட்டிலிருந்தவர்களை தாக்கிவிட்டு நகைகள் மற்றும் கணினி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபரை எதிர்வரும் 7ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார்.

இந்தச் சந்தேகநபர் தலைமையில் சென்ற குழுவினர் வீட்டு உரிமையாளரைத் தாக்கியுள்ளதுடன், அவரைக் கட்டி வைத்து 3 மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அயல்வீட்டுக்காரர்கள், சம்பவத்தை அறிந்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதும் பொலிஸார் அங்கு வந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைவிட்டுவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பிரதான சந்தேகநபரை அடையாளங்கண்டு கொண்டனர்.

இந்நிலையில் சந்தேகநபர் கடந்த டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே நீதவான், அவரை அடையாள அணி வகுப்புக்குட்படுத்துமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X