Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“இந்த நாட்டிலே, மக்களுக்கு சமாதானமும் சாந்தியும் இருக்க வேண்டும். அந்த சமாதானமும் சாந்தியும் இல்லாமல் அபிவிருத்தியை கொண்டு வர முடியாது” என, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா, யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில், நேற்று (23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“இந்த உலகத்தில், சகல நாட்டிலும் சகல முஸ்லிம் மக்களுக்கும் ஒரே ஒரு தெய்வம் தான் இருக்கிறது. ஆனால், மற்ற மதங்களில் அதிக தெய்வங்கள் இருக்கின்றன.
“இந்த நாட்டிலே, மக்களுக்கு சமாதானமும் சாந்தியும் இருக்க வேண்டும். அந்த சமாதானமும் சாந்தியும் இல்லாமல் அபிவிருத்தியை கொண்டு வர முடியாது. ஆகவே, எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருந்தால், இந்த நாட்டுக்கு அபிவிருத்தியை கொண்டு வரமுடியும். இதனைவிடுத்து, சின்ன சின்ன துண்டுகளாகப் பிரிந்து இருந்தால், பெரிய பிரச்சினைகள் தான் ஏற்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago