2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறுவர் அபிவிருத்திக்காக 649.5 மில்லியன் தேவை

Gavitha   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு, அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள 649.5 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக யாழ்ப்பாண மாவட்;டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. சிறுவர் சமூகமயமாக்கல், சிறுவர் பாதுகாப்பு ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிறுவர் சமூகமயமாக்கலின் கீழ், பாதிப்புக்குள்ளான 3,000 சிறுவர்களுக்கு, பாடசாலை உபகரணங்கள் வழங்குவதற்கும்  பாதிப்புக்குள்ளான 1,500 சிறுவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கவும், பெற்றோர்களிடமிருந்து பிரிந்து சிறுவர் இல்லங்களிலுள்ள 200 சிறுவர்களை மீண்டும் பெற்றோர்களுடன் இணைக்கும் போது உதவி வழங்குவதற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கவும் இந்த தொகை தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குடும்பங்களிலிருந்து சிறுவர்கள் பிரியாமல் இருக்க 200 குடும்பங்களில் வாழ்வாதார உதவியாக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உள்ள 100 குடும்பங்களுக்கு வாழ்வதார உதவியாக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும், மதுபானம், போதைப்பொருள் பாவனை தொடர்பில் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வை நடத்துவதற்கும், 1,500 சிறுவர்களுக்கு போசாக்குணவுகள் மற்றும் சிறுவயது கர்ப்பிணிகளுக்கு உதவிகள் வழங்கவும் மொத்தமாக 226.5 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை மேற்கொள்வதற்கு 423 மில்லியன் ரூபாயும் தேவைப்படுதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X