Princiya Dixci / 2022 ஜூலை 20 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
துப்பரவு பணியில் காணி உரிமையாளர் ஈடுபட்ட நிலையில் இவை அடையாளம் காணப்பட்டன.
இது தொடர்பில் காணி உரிமையாளரால் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, விசேட அதிரடிப்படையினரால் நேற்று (19) இவை மீட்கப்பட்டுள்ளன.
இதில் மோட்டர் செல்கள், மகசின்கள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026