2025 ஜூன் 28, சனிக்கிழமை

தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை - தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு முன்பாக இன்று (24) காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

தம்பாட்டியில் அமைக்கப்பட்ட மீன் சந்தையில், கடற்றொழிலாளர்களிடம் புதிதாக அறவிடப்படும் வரியை நிறுத்துமாறு வலியுறுத்தியே, இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

“தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்களிடம் கொள்வனவு செய்யப்படும் கடல் உணவு வகைகள், உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் வரும் மேலதிக கடல் உணவுகளே வெளியிடங்களுக்கு அனுப்பப்படும். 

“ஊர்காவற்றுறை பிரதேச சபையால், தற்போது சந்தை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த சந்தையில், வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடம் பிரதேச சபையால் வரி அறவிடப்படுகிறது. அதனால், உள்ளூர் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .