Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வலிகாமம் தெற்குப் பகுதியில் வீதியோரத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த மரங்களில் 9 மரங்கள், இன்று (19) அதிகாலை விசமிகளால் வெட்டி எறியப்பட்டுள்ளன.
கே.கே.ஸ் வீதியில், கடந்த 1ஆம் திகதி, வலிகாமம் தெற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களால் நிழல் தரும் மரங்கள் திட்டத்தின் கீழ் 200 மரங்கள் நாட்டப்பட்டன.
அவை தொடர்ச்சியாகப் பராமரிக்கப்பட்டு வளர்ந்திருந்த நிலையில், இன்று அதிகாலை இணுவில் பகுதியில் உள்ள மரங்களில் 9 மரங்களை, விசமிகள் சிலர் வெட்டியுள்ளனர்.
பொது எண்ணத்துடன் வீதியில் நடப்பட்டு பராமரிக்கப்படும் மரங்களை இவ்வாறு தீய எண்ணத்துடன் அழிப்பது வருந்தத்தக்க விடயம் என தெரிவித்துள்ள இளைஞர்கள், இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் மரங்களை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
35 minute ago
59 minute ago