Janu / 2026 ஜனவரி 14 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்த ஒருவர் , பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு அவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
போதனா வைத்தியசாலைக்கு புதன்கிழமை (14) அதிகாலை 1.40 மணியளவில் நிறை போதையில் இரத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் தாதியர்களிடம் முரண்பட்டு , தூஷண வார்த்தைகளை பேசி , ஏனைய நோயாளர்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு, விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற நிலையில் குறித்த நபர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து , அச்சுறுத்தியுள்ளார்.
பின்னர் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட போது குறித்த நபர் தாக்கியதில் ஒரு உத்தியோகத்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிதர்ஷன் வினோத்
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago