2025 மே 17, சனிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்: எழுவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில், மோதலில் ஈடுபாடுடனர் என்ற குற்றச்சாட்டில், 7 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களை  கைதுசெய்துள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த சில தினத்துக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அவர்கள் முன்னிலையில் விஞ்ஞான பீடத்தின் 2ஆம் வருட மாணவர்கள் மோதலில் ஈடுபடடனர்.

இந்த மோதலால், சிலர் காயமடைந்தனர். இதனால் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் பதற்றமான நிலைமை காணப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், சந்தேகத்தின் பேரில், பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் 7  மாணவர்களை நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .