2025 மே 14, புதன்கிழமை

பொதுச்சபைக் கூட்டம்

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்டக் கலாசார அபிவிருத்தி சபையின் பொதுச்சபைக் கூட்டம், ஏப்ரல் 4ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.

கலாசார அதிகார சபையில் புதிதாக அங்கத்தவர்களாக இணைய விரும்பும் கலைஞர்கள், விண்ணப்பங்களை யாழ். மாவட்டச் செயலகத்தில், கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென, யாழ். மாவட்டக் கலாசார அதிகார சபையின் இணைப்பாளர் இ.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

இதே வேளை, அங்கத்துவம் பெற்றுக்கொண்டுள்ள கலைஞர்கள் மாத்திரம் கலாசார அதிகார சபையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

குறிப்பிட்ட காலத்துக்குள் அங்கத்தவராக இணைந்து கொண்டவர்கள், பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும். யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் கலைஞர்களும், அதிகார சபையில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X