Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செந்தூரன் பிரதீபன்
யாழ்.தலைமைப்பீட பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான தண்ணீர் பவுசர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.சாவகச்சேரி பகுதியில், நேற்று (25) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொக்குவில் பூநாரி வீதியைச் சேர்ந்த, வேலாயுதம் கிருஸ்ணகுமார் (வயது 33), கி.பிறேமபிரியா (வயது 27), கி.மிதுசன் (வயது 06), கி.சானுஜா (வயது 1½), கி.அக்~யன் (3 மாதம்) ஆகியோரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இயக்கச்சி பகுதியில் இருந்து நீர் எடுத்து வந்த தண்ணீர் பவுசர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .