Janu / 2024 ஏப்ரல் 03 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கிய புரம் தமிழ் வித்தியாலயத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறும், தகுதியான அதிபரை நியமிக்குமாறும் கோரி போராட்டமொன்று பாடசாலை முன்னிலையில் புதன்கிழமை (03) முன்னெடுக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள மேற்படி பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகளைக் கொண்டு இயங்கி வரும் குறித்த பாடசாலையில் தரம் 05 மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய தகுதியான ஆசிரியரின்மை மற்றும் பாடசாலையினுடைய அடிப்படை வசதிகளின்மை என்பவற்றை நிவர்த்தி செய்து தர வேண்டும் , குறித்த பாடசாலைக்கு தகுதி வாய்ந்த அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிகைகள் முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யது பாஸ்கரன்

38 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
2 hours ago