2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புடவைக் கடையில் தீ விபத்து

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தெல்லிப்பழை சந்திக்கு அருகில் அமைந்துள்ள புடவை கடையொன்றில், புதன்கிழமை (09) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த சில இலட்சம் பெறுமதியான புடவைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக, தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

கடை தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள், அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்துள்ளனர். அத்துடன், அவ்விடத்துக்கு யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  தீயினால் ஏற்பட்ட சேதம் இன்னும் கணக்கெடுப்பு செய்யப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .