Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன், ந.நவரத்தினராசா
பிறந்த சிசு உயிரிழந்த நிலையில், தாயும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த மாரசிங்க பத்திரலாகே சமீலா சுதேசினி (வயது 33) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி சம்மந்துறை வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. எனினும் அக்குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.
உடனடியாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கும் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டிருந்தார்.
இந் நிலையில் மேற்படி பெண் வெள்ளிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago