2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மணல் அகழ்ந்த இருவர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதியில் உழவு இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு சந்தேகநபர்களை, நேற்று வியாழக்கிழமை (03) கைது செய்துள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனையிறவு காட்டுப்பகுதியில் இருந்து மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள், அங்கிருந்து வெளியேறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தைச் சுற்றிவளைத்த பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்ததுடன், உழவு இயந்திரங்களையும் கைப்பற்றினர்.

சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .