Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
அச்சுவேலி, பாரதி வீதி பகுதியில், மது போதையில் வீட்டுக்கு வந்த குடும்பஸ்தர், மனைவியுடன் சண்டையிட்ட பின்னர் மனைவி, பிள்ளைகளை துரத்தி விட்டு, வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்ட வீட்டுக்குத் தீ வைத்துள்ளார்.
வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள், தண்ணீர் ஊற்றி தீனை கட்டுப்படுத்த முயன்றபோதிலும் தீ கட்டுக்கடங்காமல் வீட்டின் முகடு வரை பற்றி எரிந்து நாசமாக்கி உள்ளது.
வீட்டுக்கு தீ வைத்த சந்தேக நபரான வீட்டின் குடும்பஸ்தரை, கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத மூன்று பெண் பிள்ளைகள் வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், தந்தையே இந்த ஈனக் காரியத்தை புரிந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago