2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘மீள் சுழற்சி ஆலை ஒரு வருடத்துக்குள் நிறுவப்படும்’

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

‘யாழ். நகர்ப்பகுதிகளில் சேகரிக்கப்படும் திண்ம கழிவுகளை மீள் சுழற்சிக்குட்படுத்துவதுக்கான மீள் சுழற்சி ஆலை ஒரு வருடத்துக்குள் நிறுவப்படும்’ என யாழ்.மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகரசபை பகுதிக்குள் திண்ம கழிவுகளை முகாமை செய்வதுக்கான திட்டங்கள் தொடர்பாக கேட்டபோதே ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திண்ம கழிவுகளை மீள் சுழற்சிக்குட்படுத்தும் ஆலை ஒன்று ஒரு வருட காலத்துக்குள் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் நிறுவப்படும். இந்த ஆலை ஊடாக ஒரு நாளைக்கு 50 மெற்றிக் தொன் திண்ம கழிவுகளை மீள் சுழற்சிக்குட்படுத்தலாம்.

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் நாள் ஒன்றுக்கு 70 தொடக்கம் 80 மெற்றிக் தொன் திண்ம கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. 25 ஆயிரம் லீற்றர் மலக் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. 50 ஆயிரம் லீற்றர் கழிவு நீர் சேகரிக்கப்படுகின்றது. இவற்றை முகாமை செய்ய முறையான திட்டங்கள் தேவை.

காக்கைதீவு பகுதியில் தற்போதுள்ள மீள் சுழற்சி ஆலையில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லீற்றர் மல கழிவுகளை சுத்திகரிக்க முடியும். அதற்கு மேலாகவே புதிய ஆலையை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் இருந்து நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் லீற்றர் மல கழிவுகளே சேகரிக்கப்படுகின்ற நிலையில், வேறு பிரதேச சபைகள் சிலவற்றில் சேகரிக்கப்படும் மல கழிவுகளையும் எமது சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டுவருமாறு கூறியுள்ளோம்.

மேலும், கழிவு நீரை சுத்திகரிப்புக்கான ஆலை மாநகரசபையிடம் இல்லை. அதனையும் நிறுவ துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கழிவுகளை முகாமை செய்யும் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .