2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ் இந்திய துணைத்தூதுவர் - ஆளுநர் சந்திப்பு

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் நேற்று (02) மாலை வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரேயைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதுவரை காலமும் யாழ் இந்திய துணைத்தூதுவராக பதவி வகித்த கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் புதுடில்லிக்கு பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில், புதிதாக யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இந்திய அரசாங்கத்தால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதுக்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .