Freelancer / 2022 ஜூலை 12 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ். மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள், யாழ்.மாவட்ட செயலகத்திடம், பேக்கரி உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக எதிர்கொண்ட இடர்பாடுகள் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
எனவே பேக்கரி உற்பத்தியாளர்கள் தங்களது பேக்கரி சங்கம் ஊடாக தொடர்பு கொண்டு உற்பத்தி விற்பனையை தடையின்றி மேற்கொள்ள மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)
29 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago