2025 மே 19, திங்கட்கிழமை

வனவள உத்தியோகத்தர் மீது தாக்குதல்

Editorial   / 2018 நவம்பர் 27 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன் 

சட்டவிரோதமாக மரம் தறிப்பதை தடுக்கச் சென்ற வனவள உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் உள்ள காட்டில் சட்டவிரோதமாக மரம் தறிக்கப்படுவதாக வனவளத்திணைக்களத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய அங்கு சென்ற வனவளத்திணைக்களத்தினர் சட்டவிரோத மரம் தறித்தவர்களை கைதுசெய்ய முற்பட்ட வேளை, வனவள உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X