2025 ஜூன் 21, சனிக்கிழமை

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வெடி மருந்தை சேகரித்தவர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

அண்மையில் விடுவிக்கப்பட்ட யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவரை இன்று (25) காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மிகவும் அபாயகரமான சுமார் 10 கிலோ கிராம் நிறையுடைய வெடி மருந்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த அபாயகரமான வெடிபொருட்களை சேதப்படுத்தி, குறித்த வெடிமருந்தை சேகரித்து அதனை வேறு பகுதிக்கு எடுத்துக் செல்ல குறித்த நபர் முற்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .