2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வித்தியாவின் தாயை மிரட்டிய பெண்ணின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டினார் எனும் குற்றசாட்டில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பெண்ணின் விளக்கமறியல் 29ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு,  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில்  நீதவான் இ.சபேசன், முன்னிலையில் திங்கட்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள பெண், மன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.

'கடந்த வழக்கு தவணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட எழுது மூல பிணை விண்ணப்பம் தொடர்பில் அடுத்த வழக்கு தவணையின் போது கட்டளை பிறப்பிக்கப்படும்' என  தெரிவித்த நீதவான், வழக்கினை 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X