2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Gavitha   / 2017 ஜனவரி 10 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

பருத்தித்துறை சாரையடி பகுதியில் ஹயஸ் வாகனமும் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோதியதில், ஹயஸ் வாகனத்தில் வந்த மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, திங்கட்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த மூவரும் முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் இருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X